Friday, April 30, 2010

புத்தக தினம்!


April 23, 2010

இன்று உலக புத்தக தினமாம்.

ஏதோ மூன்று நான்கு புத்தகங்கள் எழுதியவன் என்ற முறையில் ‘வாசிப்புப் பழக்கம் ஏன் குறைகிறது?’ என்ற தலைப்பில் ஹலோ எஃப்.எம்.மில் இரண்டு நிமிடம் பேச சொன்னார்கள். நேற்று மாலை பதிப்புரிமை - காப்புரிமை கருத்தரங்கில் இருந்தபோது அவசர அவசரமாக ஏதோ போனில் உளறிவைத்தேன். என்ன சொன்னேன் என்பது அட்சர சுத்தமாக எனக்கே நினைவில்லை. சுமாராக எழுத தெரியுமென்றாலும், சுத்தமாக பேச தெரியாது என்பது என் பலவீனம். இனிமேல் ஹலோவோ, ஆஹாவோ, சூரியனோ, மிர்ச்சியோ கூப்பிட்டால் முதலில் எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் ஏற்ற இறக்கங்களோ கச்சிதமாகப் பேசிவிடவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இன்று காலை ஒலிபரப்பானதாம். நான் கேட்கவில்லை.

ஆக்சுவலாக என்ன சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே பகிர்தலுக்காக எழுதி வைத்துக் கொள்கிறேன்.

வாசிப்புப் பழக்கம் குறைவதாக நான் நினைக்கவில்லை. வாசிப்புக்கான தளங்களின் வடிவம்தான் காலம் தோறும் மாறிக் கொண்டிருக்கிறது.

புத்தகங்களை எழுதுபவர்கள் ஏன் எழுதுகிறார்கள்? பணம், புகழ் இதையெல்லாம் தாண்டி தனக்குத் தெரிந்த, தன்னால் புனைய முடிந்த விஷயங்களை மற்றவர்களோடு பகிர்தல் என்பதுதான் அடிப்படை.

வாசிப்பு என்பதற்கான தேவை ஒரு வாசகருக்கு ஏன் ஏற்படுகிறது. பிரதிகளின் ஊடாக எதையோ பெறுதல். இங்கே பெறுதல் என்பது உத்தியோகப் பூர்வமானதாகவோ, கல்வியறிவு தொடர்பானதாகவோ, கேளிக்கை கொள்ளக் கூடியதாகவோ, சோகம் கொள்ளக் கூடியதாகவோ எந்த உணர்வின் அடிப்படையிலான அறிவாகவும் இருக்கலாம். புனைவாகவும் இருக்கலாம். அபுனைவாகவும் இருக்கலாம்.

எனவே வாசிப்பு பெறுதலின் அடிப்படையிலேயே பல நூற்றாண்டுகளாய் பல வடிவங்களில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஓலைச்சுவடிகள், புத்தகங்களாய் உருமாற பல நூற்றாண்டு தேவைப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக காகிதங்களின் உற்பத்தி பெருகி புத்தக வடிவில் அறிவு பகிரப்பட்டு, பல கோடி பேர்களால் பெறப்பட்டது. இந்நிலை கிட்டத்தட்ட இருநூற்றி ஐம்பது, முன்னூறு ஆண்டுகளாய் இருக்கிறது.

நவீனகால கண்டுபிடிப்புகளின் விளைவால் இப்போது ஓலை, காகிதம் தாண்டி மின் ஊடகங்களின் மூலமாக பகிர்தலும், பெறுதலும் நடைபெற்று வருகிறது. வானொலி, சினிமா, டிவி, இண்டர்நெட், மொபைல் போன் என்று இன்று ஏராளமான ஊடகங்கள் அறிவு பெறுதலை, பகிர்தலை சுலபமாக்கிக் கொண்டிருக்கின்றன.

24 மணி நேரமும் தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே செய்தித்தாளை வாசித்தேயாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. வாசிக்கா விட்டாலும் பெரிய பாதிப்பில்லை. ஏனெனில் செய்தித்தாளில் எதை படிக்க வேண்டுமோ அதை செய்திகளில் பார்த்து/கேட்டு விடுகிறோம். புனைவுகளை மெகா சீரியலாகவும், மசாலா படங்களாகவும் பார்க்கிறோம். புத்தகம் வாசிக்காதவரை இன்று காணலாம். ஆனால் டிவி/சினிமா/ரேடியோ இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தாதவர் கிட்டத்தட்ட இல்லவே இல்லை.

எனவே வாசிப்பு என்பது புத்தகம் தொடர்பானது மட்டுமில்லை என்று நான் எண்ணுவதால் வாசிப்புக்குறைவு என்ற வாதத்தை ஒப்புக்கொள்ள மாட்டேன். பகிர்தலும், பெறுதலும் தொடர்ந்து நடந்துகொண்டேதானிருக்கும். முன்பு காகிதத்தில் நடந்தது. இன்று ஒலி/ஒளி அலைகள் மூலமாக நடக்கிறது. இவ்வளவுதான் வித்தியாசம்.

தனிப்பட்ட முறையில் என்னுடைய தேர்வு என்பது அச்சில் வாசிப்பதுதான் என்பதையும் இங்கே பின்குறிப்பாக சொல்லிக் கொள்கிறேன்.

Source : http://www.luckylookonline.comபுத்தக தினம்!

இஸ்லாமிய நிறுவனம் நடத்தும் புத்தகக் கண்காட்சி!

முதுவை ஹிதாயத் 


கொடைக்கான‌ல் சிறுவ‌ர் பூங்கா அருகில் உள்ள‌ க‌லைய‌ர‌ங்க‌ம் ப‌குதியில் வருகின்ற மே மாதம் 1 ஆம் தேதி முத‌ல், சென்னை இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட் ( ஐ.எஃப்.டி.) நிறுவ‌ன‌ம் புத்த‌க‌க் க‌ண்காட்சி ஒன்றினை நட‌த்துகிற‌து என அத‌ன் இணைச்செய‌லாள‌ர் கே. ஜ‌லாலுத்தீன் தெரிவித்துள்ளார்.
சென்னை இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட் ( ஐ.எஃப்.டி.) க‌ட‌ந்த‌ முப்ப‌து ஆண்டுகளாக‌ ப‌திப்புத்துறையில் த‌ட‌ம் ப‌தித்து வ‌ரும் நிறுவ‌ன‌ம். திருக்குர்ஆன், ந‌பிமொழி, ந‌பிவ‌ழிக‌ள் என‌ இருநூறுக்கும் மேற்ப‌ட்ட இஸ்லாமிய நூல்க‌ளைப் ப‌திப்பித்துள்ள‌ இந்நிறுவ‌ன‌ம் ப‌ல்வேறு வித‌ ஆக்க‌ங்க‌ளைத் த‌ந்து முத்திரை ப‌தித்து வ‌ருவ‌தை த‌மிழுல‌க‌ம் ந‌ன்க‌றியும்.
த‌மிழ் நூல்க‌ளோடு ஆங்கில‌ம், ஹிந்தி, ம‌லையாள‌ம், உர்தூ ஆகிய‌ மொழிகளிலும் நூல்க‌ள் இந்தப் புத்தக கண்காட்சியில் கிடைக்கும். டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து, ஷேக் அகார் முஹ‌ம்ம‌து உள்ளிட்ட‌ அறிஞ‌ர்க‌ளின் உரைக‌ளது டிவிடி, விசிடி, திருக்குர்ஆன் மொழிபெய‌ர்ப்புக‌ள் அத‌ன் டிவிடிக்க‌ள், விசிடி உள்ளிட்ட‌வையும் க‌ண்காட்சியில் கிடைக்கும்.
மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 94435 72654 / 99437 50015 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம். இக்க‌ண்காட்சி காலை ப‌த்து ம‌ணி முத‌ல் இர‌வு ஒன்ப‌து ம‌ணி வ‌ரை ந‌ட‌க்கும்.
Source : http://www.inneram.com/201004298129/book-fair-in-kodaikanal

Please  visit my new ISLAMIC BLOG

Thursday, April 29, 2010

பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு

பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை
பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பிரபலமான வழக்கறிஞர். அவர் வெளிநாட்டிற்குச் சென்று படித்த பிரபலமான வழக்கறிஞர்.

ஜின்னா அவர்கள் லண்டனிலேயே வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டு இருந்தவர். அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.

இதை உங்களுக்கு நினைவூட்டினாலே போதும். நீங்கள் சிந்தித்துக் கொள்ளலாம்.

லண்டனிலே லார்ட்ஸ் (Lords) என்று சொல்லக்-கூடிய பிரபுக்கள் உண்டு. அந்-தப் பிரபுக்களில் ஒவ்வொருவருக்கும் அரண்மனை மாதிரி இடங்கள் இருக்கும். அந்த அரண்மனைகளுக்கு `சாரட்’ வண்டிகள் உண்டு.

அதிலேயும் ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து உண்டு. ஏழு குதிரைகளை இந்த பிரபு மட்டும் பூட்டிக் கொண்டு வண்டியில் செல்லலாம். அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியை இவர் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

இவர் மூன்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரலாம். மற்றவர்கள் இது-போன்று செய்தால் இவருடைய உரிமையை மீறியதாக ஆகும். இதெல்லாம் பழைய காலத்து சம்பிரதாய முறை. நடைமுறை சட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலே.

இங்கிலாந்து நாட்டிலே புதிதாகப் பணக்காரரான ஒருவர். அவர் பிரபு இல்லையென்றாலும்கூட பெரிய தொழிலதிபராக வந்திருக்கின்ற காரணத்தால் யார் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்தப் பகுதியிலே செல்ல முடியுமோ அப்படிப்பட்ட பகுதியிலே இந்த புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக்கொண்டு, நான் பிரபல பணக்காரனாகிவிட்டேன் என்ற அந்த பெருமையோடு அந்த வழியே சென்ற நேரத்திலே இதைக் கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவிலே இவர்மீது நஷ்ட ஈடு கோரி சடடப்படி என்னுடைய உரிமையை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். சட்டத்தை அவர் மீறியிருக்கின்றார்.

அய்ந்து குதிரைகளைப் பூட்டக்கூடிய உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. பாரம்பரியமாக உள்ள எங்களுடைய பிரபுத்துவ செயலை இது அவமானப்படுத்துவதாகும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் நஷ்ட ஈடு என்று கேட்கும்பொழுது, மில்லியன்ஸ் பவுண்டு அளவுக்கு அவர்கள் நஷ்ட ஈடு கேட்பார்கள்.

அந்த புதியப் பணக்காரர் ஒவ்வொரு பிரபலமான வழக்கறிஞரைப் போய்ப் பார்த்தாராம். அந்த வழக்கறிஞர் ஒவ்வொருவருமே நீங்கள் அய்ந்து குதிரையைப் பூட்டினாயா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இவரும் `ஆம்’ பூட்டினேன், அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆதாரத்தை நிரூபித்-திருக்கிறார்கள் என்று இவர் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த வழக்கிலே நாம் வெற்றி-பெறமுடியாது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேறு வழக்கறிஞரிடம் சென்று விடுங்கள் என்று ஒவ்வொரு பிரபல வழக்கறிஞரும் இவரைத் தள்ளிவிட்டார்களாம்.

மகமதலி ஜின்னா அவர்கள் பாரிஸ்டராக இருந்தார். மற்றவர்களைப் போல இவர் ஒன்றும் மூத்த வழக்கறிஞர் அல்ல. இந்த வழக்கைப்பற்றி ஜின்னா அவர்கள் கேட்டுவிட்டு நான் இந்த வழக்கை எடுத்து நடத்துகிறேன் என்று சொன்னார்.

எல்லோருக்கும் இது ஆச்சரியம். தோற்றுப் போகிற வழக்கை ஜின்னா அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார் என்று.

நீதிமன்றத்தில் ஜின்னா அவர்கள் எப்படி வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அய்ந்து குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி எது? எந்தெந்த குதிரைகள் எல்லாம் வண்டியில் கட்டப்பட்டன என்பதை எல்லாம் நேரில் பார்த்து ஜின்னா விசாரித்துவிட்டார்.

வெட்னரி சர்ஜன் என்று சொல்லக்கூடிய மிருக வைத்தியர் ஒருவரையும் பக்கத்திலே வைத்துக் கொண்டார் ஜின்னா. நீதிமன்றத்திலே வாதாட ஆரம்பித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. யார் வழக்கு போட்டாரோ அவருடைய வழக்கறிஞர் வாதாடினார். பிரபுகளாகிய எங்களுக்கு அய்ந்து குதிரைகளை வைத்து ஓட்டக்கூடிய உரிமைச் சட்டம் எங்களுக்கு இருக்கிறது என்பவைகளை எடுத்துச் சொல்லி விவாதம் செய்தார்.

நீங்கள் வண்டி ஓட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்.

இதிலே நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பிரிவிகவுன்சில் நீதிபதிகள் கேட்டார்கள்.

குதிரைகளை ஆங்கிலத்தில் Horses என்று சொல்லுகின்றோம். ஆனால், ஜின்னா அவர்கள் வாதாடும்பொழுது சொன்னார். எதிர்க்கட்சிகாரர் அய்ந்து குதிரைகளை ஓட்டி வந்தார் என்று சொல்லுகிறார். நான் சொல்லுகிறேன் Four Horses and one Mare (பெண் குதிரை) என்று சொன்னார்.

என்னுடைய கட்சிக்காரர் நான்கு ஆண் குதிரைகளோடும், ஒரு பெண் குதிரையோடும் சேர்த்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார்.

பெண் குதிரைக்குரிய பலம் ஆண் குதிரைக்கு இல்லை. எனவே அதை ஒரு குதிரையாகக் கருத முடியாது. சந்தேகம் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே இந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜின்னா இப்படி வாதாடினார்

ஜின்னா அகராதியைப் பார்த்தார் .
நுண் மான் நுழைபுலத்தோடு ஜின்னா அவர்கள் Horse என்றால் என்ன போடப்பட்டிருக்கிறது? அதற்கு உரிய பொருள் என்ன என்று பார்த்தார். ஆண் குதிரைக்கு என்ன பெயர், பெண் குதிரைக்கு என்ன பெயர் என்று பார்த்தார். இந்த வழக்கிலே அவருடைய அறிவைப் பயன்படுத்தினார்.

பிறகு அந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே வழக்கில் ஒவ்வொரு சொல்லும் ரொம்ப மிக முக்கியமானது.

வழக்கறிஞர் தொழிலிலே திரும்பத் திரும்ப சட்டத்தைப் படிக்கவேண்டும். திரும்பத் திரும்ப ஆய்வு செய்யவேண்டும் அதுதான் மிக முக்கியமானது.


ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு

Source :   http://ilayangudikural.blogspot.com/2009/09/blog-post_23.html

Please  visit my new ISLAMIC BLOG

குறட்டை பிரச்னையும் அதை தவிர்க்க சில வழிமுறைகளும்

குறட்டை பிரச்னையும் அதை தவிர்க்க சில வழிமுறைகளும் -அபூ சல்மா B.E., M.B.A.
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூக்கத்தில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கின்றார் என்றால் 20 வருடங்கள் தூக்கத்தில் கழிகிறது. இந்த தூக்கத்திற்காகவே இரவினை உண்டாக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகின்றான்:

இன்னும், அவன் தன் ரஹ்மத்தினால் உங்களுக்கு இரவையும், பகலையும் உண்டாக்கினான்; (இரவு) நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு, (பகல்) நீங்கள் அதில் அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான். இதற்காக அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக! (அல்-குர்ஆன் 28: 73)

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். (அல்-குர்ஆன் 78: 9)

மேற்கூறிய அல்-குர்ஆனிய வசனங்களில் தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கியிருக்கிறான் அல்லாஹ். ஆனால் அந்த தூக்கத்தில் மனிதர்கள் தன்னை அறியாமலேயே ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினைதான் குறட்டை. குறட்டை பிரச்சினையால் இரவு, பகல் என்று பாராமல் எந்த நேரத்தில் தூங்கினாலும் பக்கத்தில் படுத்திருப்பவர்(கள்) பாடு படுதிண்டாட்டம்தான். ஆக, குறட்டை பிரச்னைப்பற்றி இத்தொகுப்பில் பார்ப்போம்.

பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.

குரல்வளை சுருங்கும் போது வெளியேறும் மூச்சுக் காற்றின் இயல்பான அளவு குறைந்த சத்தத்தை உண்டாக்குகிறது. தொண்டையின் சுவர்களில் இருக்கும் அண்ணங்களிலிருந்தும் சப்தம் உற்பத்தியாகும். குழந்தைகளிடமும் குறட்டைப் பிரச்னை உண்டு, இதற்கு முக்கியக் காரணம் அடிநாய்டுகள் தான். குழந்தைகளது தொண்டையின் மேல் பகுதியில் அடிநாய்டுகள் மிகப் பெரிய அளவில் இருக்கும். இதனால் குறட்டை வரும். இரண்டு டான்சில்களும் சந்திக்கும் இடத்திலிருந்தும் குறட்டைச் சப்தம் வர வாய்ப்பு உண்டு.

அதிக உடல் எடை குறட்டைக்கு முக்கியக் காரணம், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்ந்துவிடும். முறையான உணவுப் பழக்கம் இல்லாதவர்கள் இந்த குறட்டைப் பிரச்னையால் பாதிக்கப்படுவதுண்டு.

குறட்டையில் மூன்று வகை உண்டு. முதலாவது மூளையின் மத்தியப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உண்டாவது, இரண்டாவது அப்ஸ்ட்ரக்டிவ் டைப், இது கொஞ்சம் கடுமையானது. இந்த வகையில் இயல்பான மூச்சிவிடுவதில் சிரமம் ஏற்படும், மூன்றாவது வகை மிகிஸ்ட் டைப், இது முதலிரண்டு வகையின் கூட்டணி
Positive airway pressure காரணமாகவும் குறட்டை வரும்.

பாலிஸோம்னோகிராபி என்ற டெஸ்ட்டுகள் மூலம் குறட்டை மூச்சுக் குழாயில் காற்று உட்புகும் தன்மை கால்களின் இயக்கம் அல்லது அசைவு உடலின் இயங்கு நிலை, நாடித்துடிப்பு, ஆக்ஸிஜன் சமச்சீரான நிலை உள்ளிட்டவற்றை கண்காணித்து தெரிந்துக் கொள்ள முடியும்.

முன்பெல்லாம் குறட்டைக்குச் சிகிச்சை கிடையாது, ஆனால் இப்போது நிறைய யுருலோ டயாலிட்டோபேரிங்கோ பிளாஸ்டி இது ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரியோ என்று எண்ணி விடாதீர்கள். தொண்டையில் செய்யப்படும் ஆபரேஷன்தான் இது. தவிர ரேடியோ ஃப்ரிக்குவின்சி முறை
(Radio Frequency Method) எனப்படும் நவீன சிகிச்சையும் வந்திருக்கிறது. இம்முறைகளின் மூலம் குறட்டையை பெருமளவு கட்டுப்படுத்திவிட முடியும். இவை இரண்டுமே ஆபரேஷன் செய்து குறட்டையை குறைக்கும் முயற்சிதான். நல்ல தேர்ந்த டாக்டரிடம் மட்டுமே இந்த ஆபரேஷனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு பாதிப்புகள் உண்டாகும் ஆபத்து உண்டு.

மேலும் குறட்டையை தவிர்க்க உடல் பருமனாகாமல் தவிர்த்து விடுவது அவசியம். அதுபோல் நாள்பட்ட அலர்ஜி இருப்பவர்கள் உடனடியாகச் சிகிச்சை எடுப்பது நல்லது. கழுத்து தொண்டையின் மேல் பகுதியில் கொழுப்புச் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முறையான மூச்சுப் பயிற்சி எடுப்பதாலும் குறட்டையை தவிர்க்க முடியும். அது மட்டுமில்லாமல் மது அருந்தும் பழக்கம் இருக்கவே கூடாது, போதை மாத்திரைகள் மற்றும் மயக்கம் தரும் மருந்துக்கள் உட்கொள்ளவே கூடாது.

Source : http://www.islamkalvi.com/

சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்!


எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துப் பின்பற்றுவதற்கு விரும்பிய ஒரு மனிதர் பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டார்:

"இறைத்தூதரின் வாழ்க்கைச் செலவுக்குத் தேவையானவற்றை அவர்கள் எவ்விதம் தேடிக்கொண்டனர்?"

பிலால்(ரலி) அவர்கள் கூறத் துவங்கினார்கள்:

தூதரின் கையில் சேமிப்பு என்று எதுவுமே இல்லாதிருந்தது. மரணம் வரை இறைத்தூதரின் தினசரி பிரச்சனைகளை நான் தான் கவனித்து வந்திருந்தேன். முஸ்லிம் சகோதரர்களின் எவராவது சிலவேளைகளில் அவர்களிடத்தில் வருவர். வறுமை காரணமாக பெரும்பாலும் அவர்கள் முக்கால் நிர்வாணத்தில் இருப்பர். அதனைக் கண்ட உடனேயே திருத்தூதர் என்னிடம், "பிலால், இவருக்கு ஒரு துணி ஏற்பாடு செய்து கொடுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனடியாக வெளியே சென்று யாரிடமிருந்தாவது கடன் வாங்கி அம்மனிதருக்கு உணவும் உடையும் ஏற்பாடு செய்து கொடுப்பேன். இது போன்றப் பிரச்சனைகளில் எனது கஷ்டங்களைக் கண்ட ஒரு முஸ்லிமல்லாத வியாபாரி என்னிடம் கூறினார்: "பிலால், நீ இவ்விதம் பலரிடமிருந்தும் கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டாம். எனக்கு அத்தியாவசியத்திற்கும் மேலாக வசதியுண்டு. என்னிடம் மட்டும் நீ கடன் பெற்றுக் கொள். உனக்குத் தேவையான கடன் நான் தருகின்றேன்."

பின்னர் அதன்படியே நான் செய்து வந்தேன். இவ்வாறு அவரிடமிருந்து வாங்கியக் கடனின் அளவு வெகுவாக உயர்ந்திருந்தது. ஒருநாள் உடலைத் தூய்மை செய்துக் கொண்டு, பாங்கு அழைப்பு கொடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வியாபாரியும் மற்றும் சில நபர்களும் கூட்டமாக என்னை நோக்கி வந்தனர்.

"ஏய், அபிசீனியக்காரா!", விரும்பத்தகாத சுரத்தில் அந்த மனிதர் என்னை அழைத்தார்.

"நான் இதோ இங்கே இருக்கிறேன்", என்று கூவியவாறு நான் அவர் அருகில் ஓடிச் சென்றேன்.

அந்த மனிதரின் முகத்தில் திருப்தியற்ற பாவனை. கடுமையுடன் அவர் என்னிடம் கேட்கின்றர்:

"இம்மாதம் முடிய இனியும் எத்தனை நாட்கள் உள்ளன?"

நான் கூறினேன், "கிட்டத்தட்ட முடியப்போகின்றது".

"வெறும் நான்கு தினங்களே மீதம் உள்ளன. எனக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற அன்று நான் நடவடிக்கை எடுப்பேன். நீ பழையது போன்று ஆடு மேய்க்கச் செல்ல வேண்டி வரும்", அம்மனிதர் மிகக் கடுமையாகக் கோபத்துடன் கூறினார்.

இதனைக் கேட்பவர்கள் என்னைக் குறித்து என்ன நினைப்பர்?. எந்நிலை மோசமாவது நிச்சயம். திருத்தூதரைக் கண்டு இவ்விவரத்தைத் தெரிவித்தப் பின்னர் நான் கூறினேன், "அம்மனிதருக்குக் கொடுக்க என் கையிலும் உங்கள் கையிலும் எதுவுமே இல்லை. எனவே சிறிது காலம் இவ்விடம் விட்டு மாறி நிற்கத் தாங்கள் என்னை அனுமதிக்க வேண்டும். அல்லாஹ் ஒருவழி நமக்குத் திறந்துத் தருவது வரை அது தான் நல்லது".

இதனைக் கூறி விட்டு நான் வெளியேறினேன்.

யாத்திரைக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக் கொண்டு நான் தூங்கச் சென்றேன். அதிகாலையில் புறப்படுவதற்குத் தயாராகும் பொழுது யாரோ என்னை அழைக்கும் சப்தம்.

"பிலால், தூதரைச் சென்று காணுங்கள்!".

நான் தூதரைக் காணச் சென்றேன். அங்கு நான்கு ஒட்டகங்கள் நின்றிருந்தன. அவற்றின் மீது நிறைய சரக்குகளும் இருந்தன. தூதர் என்னிடம் கூறினார்கள்:

"மகிழ்ச்சியாக இருங்கள். உங்களின் கடனை அடைக்க அல்லாஹ் உதவி செய்திருக்கின்றான்.

வெளியே காண்பவை ஃபதக்கின் அரசர் எனக்குக் கொடுத்தனுப்பிய அன்பளிப்புகளாகும். அதனைக் கொண்டு சென்று கடனை அடைத்துக் கொள்ளுங்கள்".

பிலால்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அதனைக் கொண்டுச் சென்று இறைத்தூதர் கூறியபடியே செய்து விட்டுப் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்தபொழுது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்: "கடனை அடைக்க அப்பொருட்கள் போதுமானதாக இருந்ததா?"

நான் கூறினேன், "அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். உங்களின் கடன் முழுவதையும் அவன் திருப்பியடைத்து விட்டான்".

திருத்துதர் மீண்டும் கேட்டார்கள்: "அப்பொருட்களில் இனி ஏதும் மீதம் உள்ளனவா?"

நான் "ஆம்" என்றேன்.

அதனைக் கேட்டவுடன் தூதர் கூறினார்கள்: "நீ, அதிலிருந்து என்னை மீட்டுத் தர வேண்டும். அது முழுவதும் செலவு(தர்மம்) செய்தல்லாமல் என் குடும்பத்தினருடன் என்னால் நிம்மதியாக இருக்க இயலாது".

அன்று இரவு தொழுகை முடிந்தப் பின் இறைத்தூதர் என்னைத் தேடினார்கள்.

"மீதமிருந்தப் பொருட்களை என்னச் செய்தீர்கள்" கவலையுடன் என்னிடம் கேட்டார்கள்.

"அவை அங்கேயே தான் உள்ளன. தேவை என்று எவரும் அதன் பிறகு இதுவரை வரவில்லை" என்றேன்.

அன்று இரவு திருத்தூதர் அவர்கள் விட்டிற்குச் செல்லாமல் பள்ளியிலேயே தங்கினார்கள்.

மறுநாள் இரவு மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள், "அப்பொருட்கள் என்னவானது?".

நான் கூறினேன்: "தாங்கள் நிம்மதியாக இருக்கலாம். அப்பொருட்கள் முழுவதும் தர்மம் செய்து தீர்ந்தாகி விட்டது".

இதனைக் கேட்டவுடன் எம்பெருமானார் திருநபிகள்,

"அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கு நன்றி. அப்பொருட்களுக்கு உடமையாளனாக மரணப்பட்டு விடுவேனோ என நான் பயந்துக் கொண்டிருந்தேன்" என மறுமொழி பகர்ந்தார்கள்.

மக்களுக்கு இடையில் தங்கள் நிலை மோசமாகும் விதத்தில் தனக்குக் கடன் பெருகிய பொழுது எம்பெருமானார் நபி(ஸல்) அவர்கள் எவ்விதக் கவலையும் படவில்லை. ஆனால் அதேநேரம், சிறிது சொத்துக்கள் தன் கையில் மீதம் இருந்தது நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையான கவலையில் ஆழ்த்தி விட்டது. மனிதர்கள் எதனையும் சேமித்து வைக்கக் கூடாது என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை தரவில்லை. எனினும், தங்களுக்குச் சேமிப்பு என்று ஒன்றுமே இல்லையே என முஸ்லிம்கள் கவலைக் கொண்டு அதற்காக தன்நிலை மறந்து பகீரத முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது முஸ்லிம்களுக்கு வழிகாட்டி என மேடை தோறும் முழக்கிக் கொள்ளும் இதுபோன்ற நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைத் தருணங்களையும் மனதில் நினைவுறுத்திக் கொள்வது பயன் தரும்.

நன்றி: எ. சயீத் (தேஜஸ்)

தமிழாக்கம்: சகோ.அபூசுமையா

சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்!
நன்றி : http://www.satyamargam.com

Wednesday, April 28, 2010

பேரலையா? பிரளயத்தின் முன்னுரையா?

 
டாக்டர் ஹிமானா சையத்
அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7:97-98)

"தென்னை மரத்துக்குத் தேள் கொட்டினால் பனைமரத்துக்கு நெரிகட்டியது போல" என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரித்தான் இந்தோனிஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பம் தென்கிழக்காசியாவை மட்டுமல்ல - ஆஸ்திரேலியா ஆப்ரிகா கண்டங்களையும் தாண்டிப் பாய்ந்து கோடிக்கணக்கான மனிதர்களின் வாழ்கையோடு விளையாடி, பல்லாயிரம் மக்களின் இன்னுயிர்களையும் பறித்துக் கொன்டு விட்டது!

"சுனாமி"ப் பேரலை இதுவரை உலகம் பார்த்திராத இழப்புகளையும் இன்னல்களையும் தந்திருக்கிறது! எதுவும் மிஞ்சாமல் எல்லாவற்றையும் இழந்து விட்டவர்களே, பல்லாயிரம் பேர்! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது! நம் அனுதாபங்களும் பிரார்த்தனைகளும் அந்த சகோதர சகோதரிகளுக்காக!

தமிழகத்தில் இயற்கைப் பேரழிவுகள்
இதற்கு முன்னும் ஏற்பட்டதுண்டு. 1964 டிசெம்பரில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரம் பேர் மாண்டு போனார்கள்! ஒரு ரயிலே அடித்துச் செல்லப்பட்டது. தனுஷ்கோடி நகரமே இல்லாமல் ஆக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு - தமிழ் மக்களின் வாழ்க்கையில்  வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கோரத் தாக்கத்தை தழும்பைத் தந்து விட்டுச் சென்று விட்டது இந்த கடல் அலையின் கோபாவேசம்!

எல்லாம் 20 வினாடிக்குள் நிகழ்ந்து விட்ட அதிசயம்! கான்கிரிட் கட்டடங்கள் அட்டைப் பெட்டிகள் போல அடித்து நொறுக்கப்பட்டதைப் பார்த்தோம். பஸ்களும் லாரிகளும் கனரக எந்திரங்களும் தகர டப்பாக்கள் போல மிதந்து சென்றதைப் பார்த்து மிரண்டோம்!. நம் உடன் பிறப்புக்கள் இதுவரை இந்த உலகில் நம்முடன் நடமாடிக்கொண்டிருந்த சகோதர சகோதரிகள், பிஞ்சுக் குழந்தைகள் நொடிப்பொழுதில் அந்த அசுர அலைக்குள் அமிழ்ந்து போனதையும் டிவியில் பார்த்துப் பதறித் துடித்தோம்!
நம் ஆயுள்வரை அந்த உரைந்து போன கணங்களை மறக்கவே முடியாது என்பது முற்றிலும் உண்மை! சுனாமி எச்சரிக்கைக்கான சரியான முன்னறிவிப்பு இருந்திருந்தால் ஓரளவுக்கேனும் உயிர் நஷ்டங்களைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள்!

உண்மை! அனுபவங்களின் அடிப்படையில் தான் மனிதன் பாடம் படித்தாக வேண்டும்! அப்படித் தான் கற்காலத்திலிருந்து படிப்படியாக மனிதன் இந்த நாகரிக காலத்துக்கு முன்னேறி வந்திருக்கிறான்! எனவே பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அந்த விசயத்தில் நம் அரசு இனி கவனம் செலுத்தும் என்று நம்புவோம்!

ஆனால் இத்தகைய இயற்கைப் பேரழிவுகளை முற்றிலுமாக மனிதனால் வென்று விட முடுயுமா? தற்காத்துக்கொள்ள முடியுமா? அது சாத்தியமா? சுனாமிப் பேரலையை நேரில் - அல்லது படங்களைப் பார்தவர்கள் யாராலும் "முடியும்" என்று அடித்துச் சொல்ல முடியாது!

மனிதப் பகுத்தறிவு அதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாது. காரணம் எல்லாம் ஒரு நொடியில்! கண்ணிமைத்துத் திறப்பதற்குள்!

உயிரும் உடலுமாய் - ரத்தமும் சதையுமாய் சிரிப்பும் கும்மாளமுமாய் - இயங்கிக் கொண்டிருந்த மனிதர்கள் குப்பை கூலங்களாய் முட்புதறுகளுக்குள் சிக்கிக் கொன்டதும் - மண்ணுக்குள் புதைந்து போனதும் மனித அறிவுக்கெல்லாம் அப்பாற்பட்ட விசயம் அல்லவா?!

யார் நம்புகிறார்களோ இல்லையோ, முஸ்லிம்களான நாம் அதை நம்புகிறோம்! காரணம் இது நமக்குப் புதிய விசயங்கள் அல்ல! இந்த உலகத்தில் இதற்கு முன் நடக்காதது எதுவும் இப்போது புதிதாக நடந்து விடவில்லை! இதை விடவும் பெரிய பேரலைகளை நெருப்பு மழைகளை  - பூமி அதிர்வுகளை - வெள்ளப் பெருக்கை சில சமுதாயங்களின் ஒட்டுமொத்த அழிவுகளை இந்த உலகம் சந்திதிருப்பதைப் பாலபாடமாகப் படித்தவர்கள்தான் தான் முஸ்லிம்கள்!
  • இயற்கைப் பேரழிவு என்று சிலர் சொல்லலாம்!
  • விதி என்று சொல்லி சிலர் ஆசுவாசப் பட்டுக் கொள்ளலாம்!
  • காஞ்சி மடாதிபதியைக் கைது செய்ததால் ஏற்பட்ட "தோஷம்" என்று சிலர் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்!

ஆனால் முஸ்லிம்கள் இதைப் பார்க்கும் பார்வையே வேறாக இருக்க வேண்டும்!

  • அல்லாஹ், தன் திருமறையில் சொல்லிக் காட்டி எச்சரிக்கை செய்யாதது எதுவுமா நிகழ்ந்துவிட்டது?
  • ஆதுவின் கூட்டமும்,
  • லூதுவின் கூட்டமும்
  • நூகுவின் சமுதாயமும்
  • அழிந்த கதைகளை நம் வேதம்  சொல்லிக் காட்டவில்லையா?

'அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லயா'? எல்லாம் நாம் படித்த விசயம் தான்! பச்சைக் குழந்தைகளாய்  மதரசாவில் பாடம் படித்த காலத்திலிருந்து கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து போன விஷயங்கள் தான்!

ஆனால், என்ன? புராணக்கதையாய் - பத்தோடு பதினொன்றாய் மனதில் புதைந்து - மறந்து போயிருந்த அந்தக் கதையும் காட்சியும் இதோ நிஜமாய் - வெகு நிஜமாய் கண் முன்னே நிகழ்ந்து நம்மை அதிர்ச்சியில் உரைந்து போக வைத்திருக்கிறது! அவ்வளவு தான்!
  • ஏன் நடந்தது இந்தக் கொடூரம்?
  • எதற்காக இந்தப் பேரழிவு
  • இதற்கு யார் பதில் சொல்ல முடியும்?

மனித எஜமான உத்தரவுகளுக்கே தலை குனிந்து - கைகட்டி வாய் பொத்திப் பணிந்து நிற்கும் மனிதன், படைத்த இறைவனிடமே  கேட்க முடிந்த கேள்வியா இது?

எனவே, இப்போது கேள்வியெல்லாம் கேட்க வழியில்லை - முடியவும் முடியாது! யாராலும் - எவராலும்! வேரென்ன செய்யலாம்? செய்ய முடியும்?
  • வயது முதிர்ந்த பெரியவர்களை
  • பால்மணம் மாறாத பச்சிளம் பாலகர்களை
  • வாழ்வை இப்போது தான் தொடங்கியிருந்த இளவட்டங்களை
  • உல்லாசப் பொழுது போக்குக்காக ஊர் விட்டு - நாடு விட்டு நகர்ந்திருந்தவர்களை
  • ராஜாக்களை
  • மந்திரிகளை
  • அதிகாரிகளை
  • அறிவியல் வல்லுநர்களை
கந்தைத்துணியாய் கசக்கி நொருக்கி முள்ளுக்குள் சொருகி - மண்ணுக்குள் புதைத்துவிட்ட  அந்த "சகல சக்தியாளன்", நம்மை உயிருடன் விட்டு விட்டதற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்ன விதமான நன்றியைத் தெரிவிக்கப் போகிறோம்?
இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தான் இந்தப் பேரழிவின் மூலம் இறைவன் தரும் படிப்பினை இருக்கிறது! அது தான் இந்த தலையங்கத்தின் நோக்கமும் கூட!

அதை, இன்னும் எளிதில் புரியுமாறு விரிவாக்கிச் சொன்னால், இன்று இந்த சுனாமி அலையில்
மாண்டுபோன அத்தனை மனிதர்களும் - ஏற்பட்ட அனைத்து  நஷ்டங்களும்
உயிர் தப்பித்துக் கொண்ட நமக்குப் பாடம் சொல்லித் தருவதற்காக இறைவன் உபயோகித்த பாட உபகரணங்கள் தான் (Teaching Guides) என்ற உண்மை நமக்குப் புரிய வேண்டும்!

எனவே பொங்கிப் பிரவாகித்த இந்த சுனாமி அலையை ஒரு சராசரி இயற்கை நிகழ்வாக - பேரழிவு ஏற்படுத்திய பேரலையாய் மட்டும் பார்க்காமல்,
  • முன்பு நிகழ்ந்த "பிரளயங்களின் முன்னுரை" யாகப் பார்க்க வேண்டும்!
  • அதில் பொதிந்துள்ள ஆன்மீகச் சிந்தனைகளின் வெளிச்சம், எதிர்காலத்தில் நம்மை நேர்வழியில் நடத்த வேண்டும்!

"நம்மையும் சக மக்களையும் இத்தகைய எதிர்பாராத பேரழிவுகளிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
இந்த பேரழிவில் பல விதங்களில் பாதிக்கப்பட்ட  நம் சகோதரர்களுக்கு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் தர வேண்டும். அந்த அவர்களின் நஷ்டங்களை இயன்ற அளவில்
தீர்த்து - அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் - அளவில் உதவக்கூடியவர்களாகவும் நம்மை ஆக்கி வைக்க வேண்டும்." என்று பிரார்தனைகள் தான் நம்முள் இப்போது 'அருளலைகள்' ஆக ஊற்றெடுக்கின்றன! வல்ல நாயனிடம் மன்றாடிக் கையேந்த வைத்துள்ளன!

அல்லாஹ் இந்த நம் பிரார்த்தனைகளை ஏற்றுருள் புரிவானாக! ஆமீன்

 பேரலையா? பிரளயத்தின் முன்னுரையா?
Source : http://chittarkottai.com/himana/articles/peralaiya.htm

வந்துவிட்டோம் வட்டத்திற்குள்,,,,,,,,,,,,,

From : Faizur Hadi

அஸ்ஸலாமு அலைக்கும்,

மழுங்கிய மக்களை
விழுங்கிய இயக்கங்கள்;
மயக்கமான நெறி - காரணம்
இயக்கமான வெறி!!
 
தோய்ந்த மக்களை
தோள்கொடுத்துத்
தூக்கியது இயக்கம்;
இன்று
காலரைப் பிடிக்க அதே
தோள்களைத் தேடும்
இயக்கம்!!
 
 கண்மணி நாயகம்
காட்டித் தந்த வழி;
இன்றுக்
கட்டித்தழுவி
சாக்கடைச்
சண்டை எங்கள்
சகோதரத்துவம்!! 
  
ஒரே இயக்கமென்றால்
முத்தமிடுவோம்;
மாற்று இயக்கமென்றால்
துரத்திவிடுவோம்!!
 
சத்திய மார்கத்திற்குள்
சலிக்காத 
சண்டை;
கானல் நீராய்ப் போன
சகோதரத்துவம்!!
 
ஒன்றுப்படவே குரல்கொடுப்போம்
ஒயாமல் - ஆனால்
தனித் தனியே!!
 
வெற்று இடமாய்ப் போன
எங்கள்
சஹாபாக்களின்
சகோதரத்துவம்;
இறக்கும் தருவாயிலும்
தண்ணீரைக் கொடுத்து
தரணியை விட்டு
தூயவனிடம் சென்ற உத்தமர்கள்!!
 
வேண்டாம் இந்தக் கொடுமை;
விட்டு விடுவோம் பகைமை;
வெறுப்பதும்
அணைப்பதும்
இருக்கட்டும் இறைவனுக்காக;
ஒன்றுச்சேர்வோம் அந்த
ஒருவனுக்காக!!
 
வந்துவிட்டோம்
வட்டத்திற்குள்
கலிமா சொல்லி;
இனி
வெட்டாட நினைத்தால்
வெற்றிடமாக்குவோம்!!
 
- யாசர் அரஃபாத்

மவ்லூத் - ஓர் ஆய்வு

 மவ்லூத் - ஓர் ஆய்வு
பகுதி - 1/

Download -

பகுதி -2/

Download -

மௌலூத் ஒரு பித்அத் என்று தாருல்-உலூம், தேவ்பந்த் மதரஸா கொடுத்த பத்வா


பக்கம்-1/
பக்கம்-2/


Source : http://www.makkamasjid.com/index.php?option=com_content&view=article&id=389:mowlid&catid=41:others

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன”

என் பாணி தனி பாணி. உன் தனித்துவம் என்னன்னு மொதல்ல கண்டுபடி. அதைக் காட்டு, அதுவென்ன நமது சுயம்?… நமது தனித்தன்மை?… அப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ன? யாரும் டாக்டராகவோ… நடிகராகவோ… பேச்சாளராகவோ பிறப்பதில்லை.

என் பாணி தனி பாணி .

அவன் இளைஞன். தன்னுடைய விசித்திரமான, வினோதமான, விந்தையான செயல்பாடுகளின் மூலம் பிறரை முகம் சுளிக்க வைக்கும் மனிதன். ஒருமுறை அவனின் அந்த செய்கைகள் குறித்து அவனிடமே கேள்வி எழுப்பப்பட்ட போது அவன் சொன்ன விளக்கம் உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சியடையத் தான் வைத்தது.

“ஒரு புத்தகத்தில் படித்தேன் ஒரு பெரியவர் சொல்லியிருந்தார்… அவர் இப்படித்தான் செய்வாராம்… அதைத்தான் நானும் பின்பற்றுகிறேன்!”

“ஒரு மீட்டிங்கில் ஒரு தலைவர் பேசிய போது சொன்னார்… இவ்வாறெல்லாம் அவர் இருப்பாராம்… அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்!”
“இந்த மாதிரியெல்லாம் இருந்தால் உயரலாம் என்று ஒருத்தர் சொன்னார்… அதை நான் ஏற்றுக் கொண்டு அதன்படி இருக்கிறேன்!”

இவ்வாறு யார் யாரோ… எந்தெந்த சூழ்நிலையிலோ… தங்கள் கருத்தாய், தங்கள் அனுபவமாய்… எழுதிவைத்த, பேசி வைத்த விஷயங்களை கண்மூடித்தனமாய் தன் இருப்பு நிலை உணராமல் பின்பற்றி ஒரு குருட்டுத்தானமான வெற்றிக்கு குறி வைக்கும்

அந்த இளைஞன் தொலைத்திருப்பது தன் தனித் தன்மையென்னும் ஒரு தங்கக்காப்பை. வெற்றி பெற்றவர்களின் பாதச்சுவடுகளை பாடச் சுவடிகளாக்கிக் கொள்வது நல்ல விஷயம்தான். மறுப்பேதுமில்லை. அதே நேரம் நமது சுயத்தை, நமது தனித்தன்மையை காணாமல் போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றதே!

“அதுவென்ன நமது சுயம்?… நமது தனித்தன்மை?… அப்படியெல்லாம் இருக்கின்றனவா என்ன? என்று கேட்கும் நிலையில் இன்றும் பலர் இருந்து வருவதுதான் வருத்தப்பட வைக்கும் யதார்த்த நிலை.
தனித்தன்மை

நமக்கென ஒரு நம்பகமான துறை, நாகரீகமான கொள்கை, ஒரு நயமான ஒழுங்கு, ஒரு நயமான பேச்சுத் தொனி, ஒரு நளினமான செயல்பாட்டு முறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, எந்த நிலையிலும் அதிலிருந்து விலகாமலும், அது சிதைவடையாமல் வாழ்ந்து காட்டுவதுதான் தனித்தன்மை.

சிலருக்கு தனித்தன்மையென்பது பிறவியிலேயே அமைந்து விடுவதுண்டு ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான திறமைகள் மறைந்திருக்கும் அதைக் கண்டறிந்து வெளிக் கொணர்தல் வேண்டும்.

யாரும் டாக்டராகவோ… நடிகராகவோ… பேச்சாளராகவோ பிறப்பதில்லை. தன்னிடமுள்ள தனித் தன்மையைக் கண்டுபிடித்து அதையே சிந்தித்து பல வடிவம் கொடுத்து முழுமை பெறும் போது அது மற்றவர்களால் ஏற்கப்பட்டு புகழ் பெறுவதுண்டு. ஆனால் பலருக்குத் தனித்தன்மையானது பழக்கத்தின் மூலமும், வாழும் சூழ்நிலைகளாலும் அமைவதுண்டு.

நாம் விரும்பும் துறை ஒன்றாயிருக்க, பணியாற்றும் துறை வேறாக அமைந்துவிடும் சூழ்நிலையிலும், இந்தத் துறையில் இருந்து கொண்டே நம் தனித்தன்மையை அதாவது நம் மனம் விரும்பும் துறையிலும் ஈடுபடலாம். வெற்றி காணலாம்.

அதற்கு பல எடுத்துக்காட்டுகளும் உண்டு. டெலிகிராப் கண்டு பிடித்த மோர்ஸ் என்ற விஞ்ஞானி ஓவியக் கலைஞராக முதலில் இருந்து தன் மனம் விரும்பிய டெலிகிராப் பற்றிய சிந்தனைகளைத் தொடர்ந்து வளர்த்து இறுதியில் டெலிகிராப்பைக் கண்டுபிடித்து பெரும் புகழ்பெற்றார்.

அதே போல் ஜோசப்-டி-நீப்ஸே என்பவர் படைத் துறையில் லெப்டினன்ட்டாக பணியாற்றி விட்டு, பிறகு ஆளுனராகவும் சிறிது காலம் இருந்து விட்டு, கடைசியில் தன் மனம் இஷ்டப்பட்ட ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டு போட்டோ கிராஃப்பைக் கண்டு பிடித்தார்.

காப்பி அடிப்பதல்ல தனித்தன்மை -

முன்னமே சொன்னது போல் தனித்தன்மை என்பது நமக்கான ஒரு பாணி ஒருவரைப் பார்த்து அப்படியே காப்பி அடிப்பதோ… அவர் எப்படியெல்லாம் செய்கிறாரோ, செயல்படுகிறாரோ… அப்படியே நடப்பது தனித்தன்மை ஆகாது.
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இளைஞனொருவன் ஓர் இயக்குனரிடம் நடிக்க சந்தர்ப்பம் கேட்டுச் செல்கிறான். “என்ன உன் திறமை? சொல்லு!” என்று அந்த இயக்குனர் கேட்க,

“சார். நான் எம்.ஜி.ஆர் மாதிரி கத்திச் சண்டை போடுவேன்! சிவாஜி மாதிரி வசனம் பேசுவேன்! ரஜனி மாதிரி ஸ்டைல் பண்ணுவேன், கமல் மாதிரி டான்ஸ் ஆடுவேன்!” என்கிறான்.

“தம்பி, நான் கேட்டது உன்னோட திறமையை. நீ சொன்னது மற்றவர்களோட திறமையை. உன் தனித்துவம் என்னன்னு மொதல்ல கண்டுபடி. அதைக் காட்டு. அப்பத்தான் நீ மேலே வருவே!” என்று சொல்லி அவனைத் திருப்பி அனுப்பி விடுகிறார் அந்த இயக்குனர்.உண்மைதானே?

பிறரைப் பார்த்து அப்படியே பின்பற்றுவது நம் சோம்பேறித்தனத்தைக் காட்டுவதோடல்லாது நம்மிடம் தனித்தன்மை என்று ஒன்று இல்லை என்பதை தெளிவாக்கி விடுகின்றதே!

நடிக்கச் சந்தர்ப்பம் கேட்டுச் சென்ற அந்த இளைஞன் பிறரின் பிம்பமாகத் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தனது தனித்தன்மையைப் பயன்படுத்தி ஒரு புதுமையான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திக் காட்டியிருந்தால் சந்தர்ப்பம் அவனை நாடி ஓடி வந்திருக்குமே!

“முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன” என்பதுதானே ஒரிஸன் ஸ்வெட் மார்டெனின் கூற்று.
பன்னாட்டு நிறுவனமொன்றில் உற்பத்திப் பிரிவில் மேலாளராக இருக்கும் நண்பரொருவரை சமீபத்தில் சந்தித்தபோது அவர் முகம் வாட்டமாயிருக்கக் கண்டு மெல்ல விசாரித்தேன். “பொல..பொல”வென்று கொட்ட ஆரம்பித்துவிட்டார்.

“அதையேன்பா கேட்கறே?.. நேத்திக்கு ரீஜனல் மேனேஜர் வந்திருந்தார்.. அவரோட ஒரு மீட்டிங்… அந்த மீட்டிங்ல அவர் கேட்ட கேள்வியில் ஆடிப் போய்விட்டேன்”!

“அப்படி என்ன கேட்டுட்டார்?” இது நான்.
“கிட்டத்தட்ட ரெண்டு வருஷத்துக்கும் மேலே புரடக்ஷன் டிபாரட்மெண்ட்ல இருக்கும் என்கிட்ட என்னுடைய வேலை குறித்து கேட்டார்…. நானும் சொன்னேன்! கடைசியில அவர், “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நீங்க வேலைல சேர்ந்தப்ப இங்க எந்த முறையில உற்பத்தி செய்யப்பட்டு வந்ததோ அதையேதான் நீங்களும் மாறாம பின்பற்றி வந்திருக்கீங்க! இதில் உங்க தனித்திறன் எங்கே இருக்கிறது?

யாரோ, எப்பவோ ஏற்படுத்தி வைத்திருந்த அதே முறையைக் கடைப்பிடிப்பதற்கு நீங்கள் எதற்கு? யோசிங்க சார்!… புதுப்புது முறைகள் பற்றி சிந்தியுங்கள் சார்… இருக்கிற உற்பத்தி முறைகளில் என்னென்ன மாற்றங்களை… எப்படியெப்படிக் கொண்டு வரலாம்… அதன் மூலம் உற்பத்திச் செலவு எவ்வளவு குறையும்… தர மேம்பாட்டை எப்படி குறைந்த செலவிலேயே பண்ண முடியும்னு சிந்தனை பண்ணுங்க சார்”ன்னு சொல்லிவிட்டு அவர் பாட்டுக்குப் போயிட்டார்..

நான்தான் இங்க மூட் அவுட்டாகிக் கிடக்கிறேன்!” என்று இந்த நண்பர் சொல்லிவிட்டு, ஏதோ அவர் தவறு செய்யாதது போலவும் அந்த ரீஜனல் மேனேஜர் சொல்லிச் சென்றதுதான் தவறு என்பது போலவும் பேச, எனக்கு அவரை நினைத்து பரிதாபப்படுவதா… அல்லது கோபப்படுவதா என்று புரியவில்லை.

சிந்தனை செய்யும் தனித்திறன் காரணமாகவே மனிதன் உயர்ந்தவனாக கருதப்படுகின்றான். அவ்வாறு சிந்திக்க மறந்த காரணத்தால்தான் நண்பர் நேர்மையாளராயிருந்தும் மேன்மையடைய முடியாது போய்விட்டது. இயங்கியல் முறையில் மனிதன் செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு தேடல் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே கடைசி வரை செயல்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

எதிர்ப்பிலும் வளர வேண்டும் தனித்தன்மை

“ஒரு செயலை இப்படி செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் வழக்கமாக எல்லோரும் இதை வேறு மாதிரிதான் செய்வார்கள் நான் சற்று மாற்றி புதுமையாகச் செய்தால் ஏற்றுக் கொள்வார்களோ, மாட்டார்களோ பயமாக இருக்கின்றதே!” என்று தயங்க வேண்டியதில்லை… தயங்கினால் அது வெற்றியாவதில்லை.

நம் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக நாம் முதலில் ஒரு புதுமையைச் செய்தால் உலகம் அதை நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது. பலமான எதிர்ப்புகளும் பல்வேறு பேச்சுகளும் கட்டாயம் நமக்குக் கிடைக்கும். அவற்றின் காரணமாக மனம் சோர்ந்து விடாமல் நம்பிக்கையோடு… தனித்தன்மையோடு கவனம் செலுத்தினால் கண்டிப்பாக சாதிக்கலாம்.

நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைச் சொன்னபோது அவரைப் பைத்தியக்காரன் என்று கூறி ஏளனம் செய்த கூட்டம் பின்னாளில் அதை ஏற்றுக் கொண்டது.

பிரசவ வேதனை தெரியாமல் இருப்பதற்காக குளோரோபார்ம் மயக்க மருந்தை சர்.ஜான் சைமன் கண்டுபிடித்துச் சொன்ன போது, இயற்கையான வலியுடன் பெறவேண்டிய குழந்தைப் பேற்றை மயக்க மருந்து மூலம் பெறுவதால் தாய்ப்பாசம் இருக்காது என எதிர்த்தனர். ஆனால் அந்தக் கண்டுபிடிப்புதான் இன்று வரை நடைமுறையில் இருந்து கொண்டிருக்கின்றது.

உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளினை எடுத்துக் கொள்ளுங்கள். குள்ளமான உருவம், ஒல்லியான தேகம், குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னம். ஆனாலும் எப்படி சாதனை படைத்தார்?… தன் தனித்தன்மை மீதிருந்த நம்பிக்கை.

பேசும் படம் பிரபலமாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் பேசாத ஊமைப் படத்தை எடுத்து உலகையே தன் பக்கம் திருப்பினார். “தொள…தொள” பேண்ட், இறுக்கமான சட்டை, சின்னத் தொப்பி, கைத்தடி, ஹிட்லர் மீசை, கால் மாற்றி போடப்பட்ட ஷு, வாத்து நடை போன்ற சாதாரணங்களைக் கொண்டு சாதித்தார்.

ஆரம்பத்தில் அனைவரும் ஏளனமாகச் சிரித்தார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசிக்க ஆரம்பித்து மகிழ்ச்சியாக சிரித்தார்கள். கடைசியில் தேடிச்சென்று ரசிக்க போட்டா போட்டி போட்டனர். மக்களைச் சிரிக்க வைத்துப் பார்த்த சார்லி சாப்ளின் பிறர் சொல்ல பயந்த விஷயங்களைத் துணிச்சலாகச் சொல்லி மக்களைச் சிந்திக்கவும் வைத்தார். தன் தனித்தன்மையை மட்டுமே நம்பி வெற்றி பெற்ற மனிதர் என்பதற்கு சாப்ளினை விட வேறு சிறந்த உதாரணமே இல்லை எனலாம்.

தனித்தன்மையின் தளபதிகள்

உலக வரலாற்றில் தனித்தன்மையால் தனிப்புகழ் பெற்ற சாதனையாளர்களை கூர்ந்து நோக்கினால் இந்த நிலையில் இருந்தவர் எப்படி அந்த நிலைக்கு உயர்ந்தார் என வியப்பாக இருக்கும். வறிய குடும்பத்தில் தோன்றியிருப்பார். வானளாவிய புகழைப் பெற்றுத் திகழ்வார்.

மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தன் குடும்பத்தில் பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தவர். தன் உயரிய தனித்தன்மை மிளிரும் கவிதை வரிகளால் நோபல் பரிசைப் பெறும் அளவிற்கு உயர்ந்தார்.

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஸ்டாலின் தனது தனித்தன்மை உழைப்பால் பொதுவுடமைக் கொள்கையை நடைமுறைப்படுத்தி உலகப் புகழோடு வாழ்ந்தார்.

ஏழை குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய சட்ட மேதை அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமுதாயம் தலை நிமிர்ந்து வாழ உழைத்துப் புகழ் பெற்றார்.
இரவு நேரங்களில் குடித்து எறியப்பட்டு சிதறிக் கிடக்கும் பீர் பாட்டில்களை எடுத்து விற்றும், கோவா கடற்கரையில் கேக் விற்றும் பிழைத்துக் கொண்டிருந்த அருந்ததிராய், கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் தாம் சந்தித்த பிரச்சினைகளையும், எதிர்கொண்ட பல சிக்கல்களையும் தன் தனித்தன்மையால் வெற்றி கொண்டு தன் முதல் நூலிலேயே முத்திரை பதித்து தனிப்புகழ் பெற்றார்.

“எழுந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள் இனியும் தயங்க வேண்டாம், எல்லாத் தேவைகளையும், துன்பங்களையும் நீங்குவதற்கான தனித்தன்மை பேராற்றல் உங்கள் ஒவ்வொருவரிடத்தும் உறைந்துள்ளது. அதைத் துணிவோடு பயன்படுத்துங்கள். துன்பங்கள் திசைமாறிப் போய்விடும்” என்பது சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கம். நமக்குள்ள 24 மணி நேரத்தில் நமக்காகவும், நமது வளர்ச்சிக்காகவும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கி, சிந்தித்து, நம்மையே நாம் ஆராய்ந்து, நமது தனித்தன்மையை புரிந்து கொள்ளுதல் நிச்சயம் மேன்மை தரும்.

எண்ணத்தில் வளமை வேண்டும்,
எடுத்ததெல்லாம் முடிக்க வேண்டும்,
நினைத்தது நடக்க வேண்டும்,
செய்வதில் புதுமை வேண்டும்,
புதுமையிலும் தனித்தன்மை வேண்டும்,
தனித்தன்மையில் சிறக்க வேண்டும்,
உலகமே போற்ற வேண்டும்.
THANKS TO SOURCE:- NAMADHU NAMBIKKAI..
**************

Source : http://vanjoor-vanjoor.blogspot.com/2010/04/blog-post_28.html

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தானாக வருதில்லை. அவைகள் உருவாக்கப்படுகின்றன”

Tuesday, April 27, 2010

மனிதனின் கண்கள்!!

From:
Faizur Hadi

    'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக்கொள்கிறானா?
    'ஏராளமான பொருளை நான் அழித்தேன்' என்று அவன் கூறுகிறான்.
    தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
    அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா?
    மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:6to9)

    என்று மனிதர்களுக்கு இறைவன் செய்த அருட்கொடைகளை சுட்டிக்காண்பித்து மனிதர்கள் ஒரே இறைவனான அல்லாஹ்வை வணங்க வேன்டும் என்பதர்க்காக உதாரனங்களை குறிப்பிடுகின்றான்.
    இப்போது கண்களைப் பற்றி சில தகவல்களை அறிந்துகொள்வோம்.

    இந்த உலகத்தைக் கண்டு ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு - கண். இது எவ்வாறு இயங்குகிறது?

    நமது கண் ஒரு கேமிராவைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு கேமிரா பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி(டெவலப்) செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது.
 
  இதில் ஃபிலிம் போன்றுள்ள ‘கார்னியா’(விழிப்படலம்) என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, ‘கார்னியா’ திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள ‘லென்ஸ்’-ஐச் சென்றடைகிறது. இந்த ‘லென்ஸ்’ தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’ எனப்படுகிறது.



    கேமிரா-வில் உள்ள ஃபிலிமைப் போன்று இயங்கும் ‘ரெடினா’-வில், ‘லென்ஸ்’ ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்தி(டெவலப்) செய்யப்படுகின்றன

    இந்த சின்னஞ்சிறு கண்களிளே இத்தனை
வேளைகளை வைத்திருக்கும் படைப்பாளனான அந்த ஓர்இறைவன் அல்லாஹ்வை மறந்து, இறைவன் படைத்தவற்றை மனிதர்கள் வணங்குவது மாபெரும் பாவமும், இறைவனுக்கு செய்கின்ற துரோகமுமாகும்.

 நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்(இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே
வணங்குங்கள் (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?(திருக்குர்ஆன்10:3)
    (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (திருக்குர்ஆன்16:17 )

  

Monday, April 26, 2010

நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்

" நான் முடிவு பண்ணிட்டா அப்புறம் என் பேச்சை நானே கேக்க மாட்டேன்"  என்று இனி யாரும் பஞ்ச் டயலாக் விடத் தேவையே இல்லை. "உங்கள் சிந்தனை எனக்கான கட்டளை பாஸ்" என்று நமது எண்ணங்களைப் படித்து செயலாற்றக் காத்திருக்கிறது ஜப்பான் தயாரிக்கப்போகும் ரோபோட்கள்.

Brain - Machine Interface தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித மூளையின் நியுரோ அலைகளையும், அதன் இரத்த ஓட்டத்தையும் வைத்து எண்ணங்களை அளக்கும் கருவியின் மூலம் இதனை சாத்தியமாக்க முயலும் இந்த வகை ரோபோட்கள் அடுத்த பத்தாண்டுகளில் வெளிவந்து விடும் என்று நம்பபப்படுகிறது.

இது மட்டுமல்ல உங்கள் ஒரு விரல் அசைவு இல்லாமலே உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கவும் முழுவதுமாக உங்கள் சிந்தையின் மெல்லாம் கட்டமைக்கப்பட்ட குறுந்தகவல்களை (SMS) அனுப்பும் செல்போன்களும் இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரவிருக்கின்றன என்று நிக்கி நாளிதழ் தெரிவிக்கிறது.

இது, ஜப்பான் அரசாங்கமும் ஒரு தனியார் நிறுவனமும் கூட்டாக இணையவுள்ள மிகப்பெரும் தயாரிப்புத் துறையாக வரவிருக்கிறது என்றும் அந்த நாளிதழ் தெரிவிக்கிறது. இதுமட்டுமின்றி வாகன ஓட்டி பசியாக உணரும்போது அருகே எங்கெல்லாம் உணவகங்கள் உள்ளன என்று தேடும் மென்பொருட்களும், அறையின் தட்பவெப்ப நிலை அதிகக் குளிராகவோ, சூடாகவோ இருப்பதாக அதிலுள்ள மனிதர் உணர்ந்தாலே அதற்கு தகுந்தாற்போல ஏர் கண்டிஷனரை அட்ஜஸ்ட் செய்திடும் தொழில் நுட்பமும் வர உள்ளதாக நிக்கி நாளிதழ் கட்டியம் கூறுகிறது.

Source : http://www.inneram.com/      நீங்கள் நினையுங்கள்; நான் அதன்படி நடக்கிறேன்

அன்பே உருவான அம்மா....


என் அகம் நிறைந்த அம்மா!ஒரு தந்தையைவிட தாய் பல கஷ்டங்களை அனுபவிப்பவர், தன் பிள்ளைகளுக்காக எப்பொழுதும் தியாகத்துடன் பணி புரிபவர். எனவே, எல்லா வகையான கண்ணியங்களுக்கும் உரிய முதலாமவராக, அவரைக் கருதுவது அவசியம் அல்லவா!
அல்குர்ஆனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் அறிவுரைகளும் இது பற்றி மிகத் தெளிவான விளக்கங்களைத் தருகின்றன. ''தந்தைக்காக செய்யும் பணிவிடைகளை விட தாய்க்காக செய்யும் பணிவிடைகள் மிக சிறப்பானது!'' என ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்.
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''யாரசூலுல்லாஹ்! நான் அடிபணிந்து நிற்பதற்கு மற்றவர்களை விடவும் சிறப்பானவராகக் கருதுவதற்கு உரியவர் யார்?'' எனக் கேட்டார்.
''உங்கள் தாய்!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் மொழிந்தார்கள். ''அதன் பின் யார்?'' அவர்; மீண்டும் கேட்டார்.''உங்கள் தாய்'' மீண்டும் அதே பதில் வந்தது. ''அதன் பின் யார்?'' வந்தவர் மீண்டும் கேட்டார்.''உங்கள் தாய் தான்!' நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாவிலிருந்து பதில் வந்தது. நான்காவது முறையாக, ''அடுத்தவர் யார்?'' எனக் கேட்ட பொழுது, ''உங்கள் தந்தை'' என்றார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
மற்றொரு முறை, 'தாயின் பாதத்தடியில் சேயின் சுவனம் உண்டு!' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நவின்றார்கள். பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்கு அன்புடன் பணிவிடைசெய்து, அவரை மிக நல்ல முறையில் கவனித்து வந்தால் உங்களுக்கு சுவன பாக்கியம் கிட்டும் என்பது இதன் கருத்து. இத்தகைய எண்ணற்ற போதனைகள் தாய்க்குப் பணிவிடை செய்வதை பெரும் கடமை எனக் கூறி நிற்கின்றன. பெற்றோரில் ஒருவரோ இருவருமே மரணித்துவிட்டால், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், அவர்களுக்கு மறுவுலக இன்பங்கள் கிட்டுவதற்கும் அல்லாஹ்விடம் பிரார்த்தனைப் புரிய வேண்டும் என்பது இறை தூதரின் இதயம் நிறைந்த கட்டளை.
பெற்றோருக்கு கண்ணியமனித்து, மிகுந்த கீழ்ப்பணிவுடன் நடந்து, அவர்கள் வயது முதிர்ந்துவிட்டால், அவர்களைத் திருப்தி படுத்தும் விதத்தில் பணிவிடைப் புரிவதை அல்லாஹ் போற்றியுள்ளான். அப்படி நடந்து கொள்வதைக் கட்டாயப்படுத்தியுள்ளான்.
ஆனால், ஒரு முக்கிய விஷயம்:அல்லாஹ் தடுத்துள்ள, 'செய்யக் கூடாது' என விலக்கியுள்ள எதையும் தமது அன்புப் பெற்றோர் செய்யும்படி பணித்தால், அவற்றைச் செய்யக் கூடாது. அத்தகையவற்றை தவிர்த்து நடக்க வேண்டும் என்பதுதான் இறை கட்டளை.
பெற்றோராயினும் தவறான (இஸ்லாத்திற்கு முரணான) செயல் ஒன்றைச் செய்யும்படி வேண்டினால் எப்படிச் செய்வது? எனினும் அவர்களது (இஸ்லாத்திற்கு முரணில்லாத) நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தவறு இல்லை. இதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அன்புத் தாயே!
என்மைப் படைத்த அல்லாஹ்வும், அவன் தூதரும் எமக்கு எவற்றைச் செய்யும்படி கட்டளை இட்டுள்ளார்களோ. அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுச் செய்வதற்கு நான் உறுதியுடன் இருப்பதாக முன்னரே கூறிவிட்டேன். பெற்றோரைப் பற்றிய இறையாணைகள் எவையோ அவற்றின் படி அவர்களிடம் நடந்து கொள்வேன். அந்த இறையாணைகள் என்னென்ன என்பதை நான் உங்களுக்கு நன்கு விளக்கிக் கூறியுள்ளேன். ஆதற்காக என் வாழ்நாள் முழுவதும் அமையும் என உறுதியாகக் கூற விழைகின்றேன்.
இவற்றைப் படித்துவிட்டு நன்கு சிந்தியுங்கள் அம்மா, அப்பொழுது 'என் மகன் சொல்வதெல்லாம் உண்மைதான்!' என்று உங்கள் உள்ளுணர்வுகள் உணர்த்துமாயின், எத்தகைய ஐயமுமின்றி கீழ்காணும் முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்.
''என் மகனை மௌலானா தவறான வழியில் இட்டுச் சென்றார் என நான் நினைத்தது தவறு, அவன் எனது மகனல்ல எனக் கூறியதும் தவறு. மாறாக, மௌலானா என் மகனை சரியான மகனாக ஆக்கினார், அவர் என் மகனைத் தவறான வழியில் இட்டுச் செல்லவில்லை. மாறாக, வாழ்வுக்கான நேரிய வழியைக் காட்டினார், இவன் உங்களது ஒரு மகனாக இருக்கமாட்டான் என அன்று சோதிடர் கூறியது பொய், தவறு''.
ஆமாம் தாயே! நான் கூறியது உண்மை என நீங்கள் விளங்கிக் கொண்டால் மேற்காணும் முடிவுகளுக்கே வருவீர்கள் - இது உறுதி.
கருணையே உருவான அம்மா!நீங்கள் உறுதியாக நம்புங்கள், நான் என்றென்றும் உங்கள் மகனாகவே இருப்பேன், எப்பொழுதும் நான் உங்களுக்குச் சொந்தமாவேன். எனவே, உங்கள் உள்ளத்தில் வேர்பிடித்து வாட்டும் வேதனைகளையும், அச்சத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள்.
மனித சமுதாயத்திற்கு நேரான வழியைக் காட்டும் உண்மையான மார்க்கம் இஸ்லாம் ஒன்று மட்டுமே. இது அனைத்தும் அறிந்த அல்லாஹ்வால் அருளப்பெற்றது. மனித வாழ்வுக்கு அவசியமான, அனைத்துக் துறைகளுக்கும் வழிகாட்டக் கூடிய அம்சங்கள். நீதி நெறிமுறைகள் இதில் அடங்கியுள்ளன. ஒரு வேதம் சத்தியமானதா அல்லது அசத்தியமானதா என்பதை அறிந்து கொள்ள, அந்த வேதத்தின் ஓர் அம்சத்தை மட்டும் ஆய்வுக்குட்படுத்துவது போதுமானது.
இங்கு, பெற்றோர் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் என்ன என்பதைச் சுருக்கமாக உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றைத் திறந்த மனதுடன் படிக்கும் நீங்கள், இஸ்லாம் எவ்வளவு சிறப்பான வாழ்க்கை முறையென்று என விளங்கிக் கொள்வீர்கள். இது போன்ற பரிபூரணமான, தெளிவான மற்றொரு மதம் உண்டா என்றால், 'நிச்சயமாக இத்தகைய விளக்கம் நிறைந்த, நீதி வழி சார்ந்த மற்றொரு மதம் இல்லை' என்பது உங்கள் முடிவாக இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.
இது போலவே, வாழ்வின் ஒவ்வொரு துறைக்குமான நீதிநெறி முறைகள் இஸ்லாத்தில் இருக்கின்றன, அவை மனித சமுதாயத்திற்கு எப்பொழுதும் நேர்வழியைக் காட்டி நிற்கும்.

என் அன்புத்தாயே!
நீஙகள் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தீர்கள், அவை ஒன்றிரண்டா? உங்கள் கருவறையில் என்ன சில மாதங்கள் சுமந்திருந்தீர்கள். எனக்காக நீண்ட கால வேதனைகளை சகித்துக் கொண்டீர்கள். நான் இவ்வுலக ஒளியைக் காணும்போது வெறுமனே ஒரு சதைக்கட்டிதான். அப்போது நான் சக்தியேயில்லாது பலவீனமாக இருந்Nதுன். எனினும், நீங்கள் இந்த சதைக் கட்டியை, உங்கள் உடல் வலுவைத் தியாகம் செய்து இரத்தத்தை அமுதாக்கி ஊட்டி, தாலாட்டி, உவகையோடு அவசியமான அத்தனையையுயம் தந்து கவனித்தீர்கள். நான் ஓரளவு வளர்ந்து வந்தபோது என் கல்விக்கான ஆக்கப் பணிகளைச் செய்தீர்கள்.
நான் அறிவு பெற வேண்டும், நல்லதொரு மனிதனாக வாழ வேண்டும் என்ற மட்டில்லா ஆசையோடு என்னவெல்லாமோ செய்தீர்கள். நான் நோயுற்றபோது நீங்கள் பொறுமை இழந்து காணப்பட்டீர்கள். என் கண்களில் நீர் வடிந்தால், உங்கள் இதயத்தில் இரத்தம் பீரிட்டு வருவதைப் போன்ற உணர்வைப் பெற்றீர்கள். ஊன், உறக்கம் இல்லாது காலத்தையும் சிரமத்தையும் எனக்காக அர்ப்பணித்தீர்கள்.
இவ்வாறு அன்போடு அரவணைத்து என்னை ஊட்டி வளர்த்த அன்னை நீங்கள், உங்கள் உணவை எனக்குத் தந்து நான் உண்பதை பசியுடன் பார்த்திருந்து பரவசம் அடைந்த அம்மா நீங்கள், எனக்கு அழகும் கவர்ச்சியும் நிறைந்த உடைகளை அணிவித்து அழகு பார்த்த நீங்களோ அழுக்கான பழைய உடைகளை அணிந்தீர்கள்.
உண்மையில், நீங்கள் எனக்காக தியாகம் செய்த உங்கள் பொன்னான காலமும் சிரமமும் சொற்பமானவை அல்ல. அவற்றை என் நாவினால் மொழிந்து முடித்துவிட முடியாது. இவற்றுக்காக நான் எப்படித்தான் கைம்மாறு செய்வேனோ? நான் என்னதான் உங்களுக்குப் பணிவிடைகள் புரிந்தாலும், விழுந்து விழுந்து கவனித்தாலும் உங்கள் தன்னலமற்ற தியாகங்களுக்கு எதிரில் அவை மிக அற்பமானவையே!.
பெற்ற தாயைக் கவனிக்கும் படியும், அவருக்கு உதவி ஒத்தாசைப் புரியும்படியும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நீங்கள் எனக்கு இவ்வுலகில் நல்வாழ்வுபெற்றுத் தந்தீர்கள். உங்களுக்குப் பணிவிடைப் புரிவது உதவி ஒத்தாசைப் புரிவதும் என் நீங்காக் கடமை. அந்த வகையில் என் மிக உயர்ந்த விருப்பம் என்னவெனில் என்றும் நிரந்தரமான மறுவுலக வாழ்வில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். எந்த வழியில் சென்றால் அந்த வெற்றி கிடைக்குமோ அந்த வழியை உங்களுக்குக் காட்டித் தருவது என் கடமை.
அந்த வழி இஸ்லாம் ஒன்று மட்டுமே. நாம் இவ்வுலகிலும் மறு உலகிலும் வெற்றியும் விமோசனமும் பெறுவதற்கு இஸ்லாத்தைத் தவிர வேறு வழியே இல்லை. அதன்படி வாழ்வதே நன்று. எனவே, என் அம்மா! நீங்கள் இம்மதத்தை ஏற்று வாழ்வதைக் காண நான் துடியாத் துடிக்கின்றேன், ஆசைப்படுகிறேன்.
நான் வீட்டிலிருந்த வேளையில் பல முறை இதுபற்றி உங்களுக்கு விளக்கிக் கூற முயன்றேன். 'இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன்' என்றுகூட வேண்டினேன். என்றாலும், நீங்கள் எத்தகைய கவனமும் எடுக்கவில்லi.
உண்மையில், இது தொடர்பாக நான் உங்களிடம் எதுவுமே எதிர்பாக்கவில்லை. மேலும், எனக்கு உலக வாழ்வு தொடர்பான ஏதேனும் எதிர்பார்ப்போ, ஆசையோ, ஆர்வமோ இல்லை என்பது நீங்களும் அறிந்த விஷயம்.
என் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருக்கும். ஆர்வம், ஆசை, வேதனை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக உங்கள் முன் சமர்ப்பிக்கட்டுமா அம்மா? இதோ கேளுங்கள்:
பத்து மாதங்கள் சுமந்திருந்து என்னைப் பெற்ற என் அன்னை என் உயிரையே விடவும் அன்பிற்குரியவர். அவர் என் கண் எதிரிலேயே கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பில் வீழ்ந்து வேதனைப் படுவதைக்காண நான் ஒரு போதும் சகிக்க மாட்டேன். அந்த பயங்கர வேதனையிலிருந்து என் அன்பே உருவான அன்னையை மீட்டெடுப்பதுதான் என் ஒரே எண்ணம்!.

அம்மா! நீங்கள் இப்பொது பின்பற்றும் மதம் உங்களை நரகத்திற்குத்தான் இழுத்துச் செல்லும். அதை இன்னுமே நீங்கள் விளங்கிக் கொள்ளாது இருப்பது துரதிஷ்டமே!.
இதை இன்னும் தெளிவாக நீங்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் ஓர் உதாரணத்தின் மூலம் கூறட்டுமா அம்மா!.
நீங்கள் ஒரு தொடர்வண்டியில் (ரயிலில்) பயணம் செய்வதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் புகையிரதம் போகும் பாதையில், சற்று தூரத்தே பாதை தடம் புரண்டிருப்பதை நான் தெளிவாக அறிவேன். அதில் பயணம் செய்யும் ஏராளமான பிரயாணிகள் இதை அறியாதுள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் தாம் போக வேண்டிய இடத்திற்குப் போக முடியாமற் போவதும், இடையில் மாபெரும் விபத்தொன்று நடக்கப் போவதும், அவர்களுள் பலர் பயங்கரமான முறையில் மரணத்தைச் சந்திக்கப் போகின்றனர் என்பதும் நான் நன்கு அறிந்த விவரங்கள்.
இதேவேளை என்னிடம் ஒரு வாகனம் உண்டு, அதில் பாதுகாப்பாகப் போக வேண்டிய இடத்திற்கப் போகமுடியும். எனவே, அந்தப் தொடர்வண்டியை (ரயிலை) நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் நான் பதற்றத்துடன் உங்களிடம் ஓடோடி வந்து, 'அம்மா! இதில் பயணம் செய்வது ஆபத்து, உடனே இறங்கி வந்து எனது வாகனத்தில் ஏறி அமருங்கள். பாதுகாப்பாக நம் பயணத்தை மேற்கொள்ளலாம்' என்று அன்போடு அழைக்கின்றேன்.
மரணத்தைக் கொண்டுவரும் அந்த தொடர்வண்டியிலிருந்து இறங்கி என் வண்டியில் ஏறும்படி நான் உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன். எனினும் நீங்கள் என் அழைப்பை செவிமடுப்பதாக இல்லையே! என்றாலும், அந்தப் பயணத்தின் கோர விளைவை உணர்ந்த நான், உங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருப்பேன்.
அம்மா! அந்த அழிவின் விளிம்பிற்குப் போகுமுன் தொடர்வண்டியிலிருந்து இறங்கி, எனது வாகனத்தில் ஏறிக்கொண்டால் நீங்கள் போகவேண்டிய இடத்திற்கு சுகமாக போய்ச் சேர முடியும். இல்லையாயின், நீங்களும் மற்ற பிரயாணிகளுடன் சேர்ந்து கோர அழிவைத்தான் சந்திக்கப் போகிறீர்கள். அந்தக் கடைசி கட்டத்தில் நீங்கள் 'அந்தோ! என் மகன் விடுத்த அழைப்பை ஏற்றிருந்தால்'.. அவனது வாகனத்தில் ஏறியிருந்தால்..' என கைசேதப்பட்டு, அழுது புரண்டு பிரலாபிப்பீர்கள். அது காலம் கடந்துவிட்ட பரிதாப நிலை அல்லவா!.
நீங்கள், நான் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாம் எனும் வாகனத்தில் வந்தமர்ந்து பயணத்தை ஆரம்பித்தால், நீங்கள் எதிர்பார்க்கும் இடத்திற்கு எத்தகைய இடையூறும் இன்றி பத்திரமாகப் போய்ச் சேர முடியும் என்பதில் ஐயமே இல்லை.
என்னுயிர்த் தாயே!இவை என் உள்ளத்தில் உதிர்த்த சில கருத்துக்கள். உங்கள் முன் சமர்ப்பித்துள்ளேன். இவற்றை நன்றாகச் சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களை மிகச் சரியான பாதையில் பயணத்தை மேற்கொள்ளச் செய்வானாக!
''நீங்கள் இவ்வுலககை விட்டுப் பிரிந்து சென்ற பின் அல்லாஹ் உங்கள்மிது திருப்தி கொள்ள வேண்டும். அவனுடைய சுவன செல்வங்களுக்கு நீங்கள் உரித்துடையவராக வேண்டும்'' என நான் இருகரம் ஏந்தி வல்லோனிடம் பிரார்த்தனைப் புரிகின்றேன். நான் எழுதியவை பற்றி நன்கு சிந்தித்து பதில் எழுதுவீர்கள் என திடமாக நம்புகின்றேன். அதோடு, என் குற்றங் குறைகளை மன்னிப்பீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றேன்.
இவ்வண்ணம்,
பணிவன்புள்ள மகன்
தமிழ் அச்சு: அபு அல் முஹன்னத்
source: http://www.otrumai.com/MotherSpecial2.htm
www.nidur.info

LinkWithin

Related Posts with Thumbnails