Tuesday, September 21, 2010

+1 மாணவிக்கு திருமண டார்ச்சர் கொடுத்த பள்ளி ஆசிரியர்!


நீடூர்: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு +1 மாணவியை கட்டாயப்படுத்திய, அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 435 மாணவியர் படிக்கின்றனர்  15 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில் பி.டி.ஏ. ஆசிரியராக பாலாகுடியைச் சேர்ந்த விஜயகண்ணன் பணியாற்றி வருகிறார். இவர், அப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்துள்ளார். மற்றொரு மாணவி மூலமாகவும் தூது விட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் குழப்பமடைந்த மாணவி இது வீட்டில் சொன்னால் தன்னை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என நினைத்த மாணவி, நடந்தவற்றை வீட்டில் சோல்லாமல் இருந்துள்ளார் இந்நிலையில் விஜயகண்ணனின் டார்ச்சர் அதிகமானதால் மாணவி நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர் கேட்டதையடுத்து, நடந்தவற்றை அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்களும், பொது மக்களும் சேர்ந்து, ஆசிரியர் விஜயகண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை தாசில்தார் மாலா, டி.எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் விரைந்து வந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Source : http://www.inneram.com/2010092110714/1-girl-student-tortured-by-school-teacher

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails