Wednesday, September 22, 2010

வணங்க சொன்னேன்

வணங்க சொன்னேன்
வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்
காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்


காணமல் இருப்பதும் நானே
எபோதும் இருப்பதும் நானே
காடு மலை கடலும் படைத்தேன்
நட்சத்திர கோளம் படைத்தேன்
சூரியனும் நிலவும் படைத்தேன்
அத்தனையும் படைப்பது எனக்கு
குன் என்ற சொல்லே என்றேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

தோன்றுவது என்னில் என்றேன்
மறைவதும் என்னில் என்றேன்
மனிதனையும் ஜின்னையும் படைத்தேன்
மலக்குகளும் நூரில் படைத்தேன்
அதனையும் படைத்து எனக்கு
அடிமைகள் என்றே சொன்னேன்

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

கருவுக்குள் உயிரும் நானே
நெருப்புக்குள் உஷ்ணம் நானே
ஆகாய பெருவெளி நானே
அனைத்திலும் உண்மை நானே

வணங்க சொன்னேன்
என்னை வணங்க சொன்னேன்

வேதங்களும் விதிகளும் நானே
போதகனும் தூதனும் நானே
போதனைகள் செய்ததும் நானே
வேதனைகள் செய்ததும் நானே
காணும் யாவும் நானே என்றேன்
காலம் யாவும் நானே என்றேன்
காணமல் இருப்பதும் நானே

எபோதும் இருப்பதும் நானே.
 
Source : http://rajakamal.blogspot.com/2008/09/blog-post_03.html
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails