Friday, September 24, 2010

இரட்டை கோபுரத் தாக்குதல் அமெரிக்காவின் திட்டமே! அஹ்மத்நிஜாத்

லண்டன்: அதளபாதாளத்தில் வீழ்ச்சியடைந்து வந்த அமெரிக்கப் பொருளாதாரத்தை உலக அளவில் தூக்கி நிறுத்தும் உள்நோக்குடன் அமெரிக்க அரசின் ஒரு பகுதியினரின் சதித்திட்டமே 2000வது ஆண்டில் நியூயார்க் இரட்டை கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் என்று ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குற்றம் சாற்றியுள்ளார். ஐ.நா.வின் புத்தாயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு மாநாட்டில் ஈரான் அதிபர் இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிநடப்பு செய்தன. அமெரிக்க பொருளாதாரத்தின் வீ்ழ்ச்சியை தடுத்து நிறுத்தவும், மத்திய கிழக்காசியாவில் ஜியானிஸ்ட் (இஸ்ரேல்) அரசைக் காக்கவும் அந்நாட்டு அரசின் ஒரு பகுதியினரே சதித் திட்டம் தீட்டி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஒரு கருத்து உள்ளது” என்று பேசிய அஹமத்நிஜாத், இந்த கருத்தை அமெரிக்க மக்களில் பெரும்பான்மையினரும், உலகின் பல நாடுகளின் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஒப்புக் கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாற்றில் உண்மை உள்ளதா என்பதை அறிய விரிவான ஒரு விசாரணையை ஐ.நா.நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails