Wednesday, September 29, 2010

சிரிக்க சில நகைச்சுவைகள்!

சிரிக்க சில நகைச்சுவைகள்!

1. ''கஷ்டப்பட்டு பிச்சை எடுக்கற பணத்துல உன் பிள்ளையை ஊட்டி கான்வென்ட்ல படிக்க வைக்கறியாமே!''

''ஆமாம்மா, அவன் அமெரிக்காவில் போய் பிச்சை எடுக்கணும்னு ஆசைப்படறான் தாயி!''

2. ''பயப்படாதே! டாக்டரிடம் உண்மையைத்தான் சொல்ல வேண்டும்!''

''உண்மையைச் சொல்லிவிடுகிறேன் டாக்டர்... கடந்த மூன்று மாதங்களாக உங்களுக்குக் கொடுத்த 'பீஸ்' கள்ள நோட்டு, ஸாரி..''

3. ''உங்க வீட்ல யாரோட கை ஓங்கி இருக்கும்? உன் கையா? உன் மனைவி கையா?''

''என் மனைவி கை எப்பவும் ஓங்கி இருக்கும். என் தலை வீங்கி இருக்கும்.''

4. ''டைரக்டர் சார்! ஹீரோயினுக்கு நான் கிஸ் குடுக்கற மாதிரி ஸீன் கதைல இருக்கு. ஆனா, அதை எடுக்கவே இல்லையே?''

''ஸாரி ஹீரோ சார் ஸ்டன்ட் மாதிரியே அதையும் கிரா·பிக்ஸ்ல எடுத்துட்டேன்,.''

5. ''என் மனைவி ஒரு காரியத்துல இறங்கிட்டா கடைசி வரைக்கும் முடிக்காம விடமாட்டா!''

''நல்ல விஷயம்தானே!''

''நீ வேற. என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டா மயக்கம் வர்ற வரைக்கும் அடிக்கிறா!''

6. ''லவ் லெட்டரை ஏன் குப்பைக் கூடைல போடுறே.?''
''அப்பதான் வேலைக்காரி படிப்பா...!''

7. ''உங்க கச்சேரியை வழக்கமா எப்ப முடிப்பீங்க?''

''முதல் கல் வந்ததும்!''

8. ''பெட்டியை திறங்க செக் பண்ணனும்...!''

''அப்பாடா, நான் கூட டிக்கட் செக்கிங்னு நினைச்சுட்டேன்...!''

9. ''மன்னா! படை தயாராக இருக்கிறது! போருக்குக் கிளம்புவோமா?'',

''எனக்குப் பாடை தயாராக இருக்கிறது என்று கூறும்.''

10. ''மன்னா... நேற்று இரவு தூக்கத்திலேயே ஓடி எல்லையை கடந்துவிட்டீர்!''

''அமைச்சரே.. மானத்தை வாங்காதீர். எதிரி மன்னன் படையெடுத்து வந்ததாய் கனவு கண்டேன்.''

11. ''ஏய்... மிஸ்டர்... என் சம்சாரத்தைப் பார்த்து சூப்பர் ·பிகர்னு கமென்ட் அடிச்சியாமே?''

''ஸாரி ஸார்... அது வந்து...''

''வாய் கூசலியா உனக்கு, இப்படிப் பச்சையா பொய் சொல்ற''....

12. ''அந்த பல் டாக்டர் ஆனாலும் ரொம்ப முரட்டு வைத்தியம்!''

''நிஜமாவா...?''

''ஆமாம்! பல்லை எடுக்க ரெளடிங்களை வேலைக்கு வைச்சிருக்காருனா பாருங்களேன்.''

13. ''மழை வருதுன்னு போருக்கு வாய்தா கேட்டு, எதிரி நாட்டு மன்னனுக்கு ஓலை அனுப்பினீங்களே மன்னா... திருப்பி அவர் என்ன அனுப்பினார்...?''

''போருக்கு கட்டாயம் வந்தாகணும்னு சொல்லி, மழை கோட்டு அனுப்பிவிட்டார்...!''

14. ''அந்தப் பிச்சைக்காரனுக்கு திமிர் அதிகம்னு சொல்றியே ஏன்?''

''பின்னே, 'இத்தனை நாட்களா இல்லாம இன்னிக்கு மட்டும் ஏன் எங்க வீட்டுக்கு பிச்சை எடுக்க வந்திருக்கே?'னு கேட்டதுக்கு 'டாக்டர் தான் என்னை உப்பில்லாத சாப்பாட்டை சாப்பிடணும்னு சொல்லியிருக்காரு'ங்கிறான்!''

15. ''என்ன... அந்த டாக்டர் ஆபரேஷனை பாதிலயே விட்டுட்டு போறாரு..?

''நான்தான் சொன்னேனே! அவரு டாக்டர் படிப்பை பாதிலயே விட்டவருன்னு.''

16. ''அந்த ஹீரோ வெப் டிசைனிங் படிச்சவராம்!''
''ஓ... அதான் அவருக்கு 'இணைய தளபதி'ன்னு பட்டம் தந்திருக்காங்களா!''

17. ''தலைவர் வேகமா ஓடிட்டே ஓட்டுக் கேட்கறாரே? அவ்வளவு அவசரமா?''

''நின்னு கேட்டா அவருக்கு உதை விழுமே?''

18. ''ஆபரேஷனுக்கு அப்புறம் எப்ப தையல் பிரிப்பீங்க டாக்டர்?''

''தேவை இல்லாத சந்தேகமெல்லாம் கேட்காதீங்க!''

19. ''உன் அம்மாவும், மனைவியும் எப்போ பேசிக்குவாங்க?''

''சண்டை போட்டுக்கிறப்பதான்!''.

20. ''மீட்டிங்ல என்ன அந்தச் சின்ன பையன் நம்ம தலைவரை 'நாசமா போய்டணும்'னு திட்றான்..?''

''அவனுக்கு தலைவரை வாழ்த்த வயதில்லையாம்.''

21. ''நூறு ஆபரேஷன் பண்ணா அதுல ஒண்ணு 'அப்படி இப்படி' ஆகுறது சகஜம்தானே?

''ஏன்?... என்னாங்க?... நம்ம டாக்டர் ஆபரேஷன் பண்ணின பேஷன்ட் இறந்துட்டாரா?...

''பிழைச்சுட்டார்...''
22. ''நம்ம கட்சி காலியாகிக்கிட்டே வருது தலைவரே''

''இருக்கட்டுமே, நானும் ஒரு காலத்துல காலியா திரிஞ்சவன்தானே!''

23. ''நகர்வலம் தெரியும்... அதென்ன, 'சுகர்வலம்..?''

''மன்னருக்கு சுகர் அதிகமாகி தினமும் அரண்மனையை சுற்றி வலம் வருகிறாரே...!''

24. ''ஓய் சாஸ்திரிகளே, ஏன் ஓமத்துல இவ்வளவு புகை வரவழைச்சு என்னை சித்ரவதை செய்யறீங்க. தாங்க முடியலை.''

''கல்யாணம் பண்ணிக்கறேள். உங்களுக்கு இனிமே ரொம்ப பொறுமை அவசியம்! அதைப் பழக்கப் படுத்தறதுக்குத்தான் இது. பொறுத்துக்கக் கத்தக்குங்கோ.''

25. ''ஏன் மன்னர் தன் கையோடு சேர்த்து போர்வாளைக் கட்டியுள்ளார்?''

''பயத்தில் அடிக்கடி கைநழுவி விழுந்து விடுகிறதாம்!''

26. ''குமார், பசிக்குது சுண்டல் வாங்கிக் கொடுங்க.''
''என்ன கீதா இது, குமார்ங்கற, நான் சுரேஷ்?''

''அதான்.. பார்த்தீங்களா... உங்களை அஞ்சு மணிக்கு வரச் சொன்னேன்.''

27. ''புலவரே! பத்துப்பாட்டு பாடச்சொன்னா வெத்துப்பாட்டு பாடறீரே! ஒண்ணும் புரியலையே.''

''மன்னா! இது தெலுங்கிலிருந்து ரீமேக் பண்ணின தத்துப்பாட்டு.''

28. ''சீனா போல் இந்தியாவும் உருமாற பாடுபட்டோம்' பலன் கிடைத்ததுனு தலைவர் பேசறாரே?''

''பெட்ரோல் விலை கடுமையா உயர்ந்ததால் எல்லோரும் சைக்கிள்ல போற சூழ்நிலை உருவாகிடுச்சே, அதைச் சொல்றாரு.''

 29. ''பத்திரிகைக்காரங்களை எல்லாம் தன்னோட புருஷனா அந்த நடிகை நினைக்கறாங்க.''

''எப்படிச் சொல்றே?''

''மதிக்கவே மாட்டேங்கிறாங்களே?''
Source : http://adiraipress.blogspot.comசிரிக்க சில நகைச்சுவைகள்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails