Thursday, February 4, 2010

அன்புள்ள ஆன்மாவே -1


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
இறைவனின் திருப்பெயரால்

1. எல்லாப்புகழும் இறைவனுக்கே[அவன்]
அகிலத்தை [படைத்து] பராமரிப்பவன்


2. அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்


3. தீர்ப்பு நாளின் அதிபதி

4. [எனவே] உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே உதவியும் தேடுகிறோம்

5. எங்களை நேர்வழியில் செலுத்துவாயாக!

6. 7. அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி.
அவர்கள் [உன்னால்] கோபிக்கப்பட்டாதவர்கள்
மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.

[அல் பாத்திஹா] [1.1. அல்குர்ஆன்]

அன்புள்ள ஆன்மாவே
இன்று உன்னிடம் இறைவனின்மீது அன்புவைப்பதைப்பற்றி பகிர்ந்து கொள்ளலாம் எனவந்திருக்கிறேன்
அன்பு என்ற ஒன்று இருப்பதால்தான் இன்னும் இப்பிரபஞ்சம் ஈரப்பததுடன் இருக்கிறது
உண்மையானஅன்பு இருக்கும் இடத்தில் ஆணவம், அகந்தை, பொறாமை. மற்றும் தீய பழக்கங்கள்
இருப்பதற்கு வாய்ப்பில்லை.

நீ யார்மீது அன்புகொள்கிறாயோ அவரையும் உன் நல்வழியிலேயே அழைத்துச்செல். அவரின்
சுக துக்கங்களில் பங்குகொள்.
கஷ்டநஸ்டங்களில் உதவு.

அன்பை போதிப்பது அனைத்திலும் சிறந்தது.
அன்புகொண்டவர் அழகிய முறையில் சிந்திப்பார்.
அழகிய உபதேசம் செய்வார்.
அன்பை பெற்றவர் நல்வழியை கடைபிடிப்பார்.


யார் மீதும் யாரும் அன்புபாராட்டலாம்.
அன்பை அழகிய முறையில் கையாளுங்கள்.
அன்பை நல்வழிக்காக செலவிடுங்கள்
நம் அன்பால் கெடுதல் நினைப்பவரைக்கூட
நல்லவராக மாற்றியமைக்கும் வல்லமை
கொண்ட அன்பாக செயல்படுத்துங்கள்

.ஆன்மாவே

நாம் தாய்தந்தை மீது கொள்ளும் அன்பு
கணவன் மனைவி மீது கொள்ளும் அன்பு
பெற்றபிள்ளைகள் மீது கொள்ளும் அன்பு
ஏழை எளியவர்களின் மீது கொள்ளும் அன்பு
உற்றார் உறவினர் மீது கொள்ளும் அன்பு
காதலன் காதலியின் மீது கொள்ளும் அன்பு
உற்ற தோழமைகளின் மீது கொள்ளும் அன்பு
இவையனைத்தையும் முக்கியம்தான்

ஆனால்

அதைவிட பலமடங்கு இறைவன்மீது
அன்பு கொள்ளவேண்டும் ஏனென்றால்
இப்பூமியில்
நம்மைப் படைத்து பாதுக்காத்து பரிசுத்தப்படுத்தி
நமக்கு அன்பான தாய்தந்தை தந்து
நமக்கு அழகானமுறையில் உருவம்தந்து
பிறக்கவைத்து உயிர்வாழச்செய்துள்ளான்
உடல்தந்து உயிர்தந்து உலகில் வாழச்செய்த
இறைவன் தான் நமக்கு உயர்ந்தவன்

ஆன்மாவே

இறைவனின்மீது அன்புகொண்டு அன்புகொண்டு
அனைத்தையும் வெல்லப்பார்
அன்புகொள்ள அன்புகொள்ள நம்
அருகில் ஆவலாய் இருக்கிறான்
நேசங்கொண்டு இறைவனை நினைத்து வணங்கு
உன்னருகில் நெருங்கிவருவான்.

இறையன்பு கிடைத்துவிட்டால் எதையும் ஜெயிக்கலாம்
மனித அன்பு கிடைத்துவிட்டாலே நம்மால் நிலை கொள்ளாது
அதையெல்லாம்விட
மனிதனைப்படைத்த இறைவனின் அன்புக்கிடைத்தால்!!

ஆன்மாவே எண்ணிப்பார்
அன்பை பொழிந்துப்பார் நீ எப்படியிருப்பாய் என்பதை
உன்னால் உணர்ந்துகொள்ளமுடியும்


//உமது இறைவனைக் காலையிலும் மாலையிலும்
மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடன்,
சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக!
கவனமற்றவராக ஆகிவிடாதீர்
7:205. [அல் குர்ஆன்]//


உன் உலக காரியங்களை செய்யும் ஒவ்வொரு நொடியும்
உன் இறைவனையும் அனுதினமும் அன்போடு நினைத்துக்கொள்
அடுக்கடுக்காய் வெற்றிகள் வந்துகுவியக்காண்பாய்.

.ஆன்மாவே.
இன்று அன்பைப்பற்றி பகிர்ந்துக்கொள்ள இறைவன் உதவினான்
இன்ஷாஅல்லாஹ்

இறைவன் நாடினால்
அடுத்த நல்லதொரு விசயத்தை பகிர்ந்துகொள்ள உதவுவான் என்ற
நம்பிக்கையோடும்
அதுவரை நம் இறைவன்மீதும்
உன்மீதும்
அனைத்துமனித்குலத்தின்மீதும் அன்புகொண்டவாறு
விடை பெறுகிறேன்.

.
இறைவா!
உன்னையே வணங்குகிறேன்
உன்னிடமே உதவிதேடுகிறேன்..

அன்புடன் மலிக்கா
நன்றி : http://fmalikka.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails