Monday, February 1, 2010

ஒற்றை மொக்கும் தொடர்ந்த எண்ணங்களும்

                                    
ஒற்றை மொக்கும் தொடர்ந்த எண்ணங்களும்
------------------------------------------

அன்றைக்குப் பார்த்தேன்
தனித்ததொரு ஒற்றை மொக்கு
தெருவில்.... புழுதியில்....

அவ்வழி சென்ற பூக்கூடையிலிருந்து
தவறி விழுந்திருக்குமோ..


அலங்காரக் கூந்தலில்
அழுந்தியிருக்கப் பிடிக்காமல்
வெளியேறியதாயிருக்குமோ...

ஒருவேளை...
அங்கே செல்கின்ற
இறுதி யாத்திரையின்
இரங்கல் துளியோ...

எப்படியோ....
பறிக்கப்பட்டபின்
பறிகொடுக்கப்பட்டதாய் இருக்கும் அது!

- இப்னு ஹம்துன் 
நன்றிhttp://www.vaarppu.com/view/1532/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails