Tuesday, February 23, 2010

தேடல்களில்….....

தேடல் என்பது வாழ்வின் வேர்.!
தேடல் என்பது மனதின் மகரந்தம் !
தேடல் என்பது நாளைக்கான இன்றின் கனவு!

தேடல் இன்றி யாரும் இல்லை.
தேடலின் தாகமே வாழ்வை நகர்த்தும்!

எதைத் தேடுகிறீர்களோ அதை அடைகிறீர்கள்!
ஒன்றைத் தேட, மற்றொன்று தொலையும்! - இது
மாறும் உலகினில் மாறாத நியதி! – உயிர் வாழ்க்கையின்
ஆற்றல் அழிவின்மை விதி!

ஆகாத கனியாம் உலகைத் தேடி
ஆதியில் மனிதன்
சுவனம் தொலைத்தான்.
தொலைத்த மறுமை
திரும்பப் பெற்றிட
உலகை த்தொலைத்து
உயர்ந்திட வேண்டும்.

எதை நாடுகிறீர்களோ,
அதைத் தேடுங்கள்.
எதைத் தேடினீர்கள்
என்பதை வைத்துத்தான்
யார் நீங்கள் என்று சொல்ல முடியும்.

பொருளும் புகழும் புண்ணியமும் - இறை
அருளும் அறிவும் ஆன்ம ஞானமும்
தேடுபவர்களுக்கே தென்படுகின்றன.

தன்னை த்தானே கண்டறிவதே
தேடல்களில் எல்லாம் தலையானது.
உங்களை நீங்களே
விளங்கிக்கொள்ளவும்
உங்களை பிறருக்கு ணர்த்துவதற்கும்
உங்களை த்தேடி வையுங்கள்.

தேடல்களும்
தேவைகளும் அற்ற இறைவனை
தேட முற்படும் பொழுதில்
தொலைப்பதற்கு நீங்கள் வேண்டும்.
உங்களின் ‘தான்’ வேண்டும்.
அதற்காகவாவது......
உங்களைத் தேடி வையுங்கள்.
-----------------------------------------

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails